இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமான தமிழ்நாட்டினை, 2030 ஆம் ஆண்டிற்குள், ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இலக்கை நிர்ணயத்துள்ளார். அதனை விரைவில் செய்திடவும், இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கிடவும், தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. ஒன்றிய அரசின் 2024 – 25 ஆம் ஆண்டிற்கான, பொருளாதார ஆய்வு அறிக்கையில், தமிழ்நாட்டிற்க்கு புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
உலகளாவிய நிறுவனமான, கோகி ஹோல்டிங்- ஜப்பான், ஜெர்மனி, சீனா, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில்உற்பத்தி ஆலைகளைக் கொண்டுள்ளது.ஹிகோகி பவர் டூல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்யின் தலைமையிடம் பெங்களூரில் உள்ளது. இந்நிறுவனத்திற்கு, 15க்கும் மேற்பட்ட விற்பனை அலுவலகங்கள், 500க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் நூறுக்கும் மேற்பட்ட சேவை மையங்கள் உள்ளன.
செங்கல்பட்டு மாவட்டம், மஹிந்திரா வோர்ல்டு சிட்டியில் உள்ள தொழில் பூங்காவில், ரூ. 700 கோடி முதலீடு மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நேரடி, மறைமுக வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் மின் கருவிகள் உற்பத்தி ஆலை தொடங்குவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…