தஞ்சை சேர்ந்த அறிவழகன் (37), மனைவி உஷா (35), மூத்த மகள் ரூபா (10), இளைய மகள் பவ்யா ஸ்ரீ (9),தங்கை மகள் தேஜாஸ்ரீ. இவர் ஐவரும் ஒரே பைக்கில் பனங்காட்டுப் பகுதியில் உள்ள கோயிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார். மாதாக்கோட்டை பைபாஸ் மேம்பாலம் அருகில், நாகூர் தர்காவிற்கு சென்று கொண்டிருந்த கார், முன்னாள் சென்று கொண்டிருந்த அறிவழகன் பைக் மீது மோதியது.
பைக்கில் இருந்த ஐவரும் சினிமா பாணியில் தூக்கி வீசப்பட்டனர். இதில் அறிவழகன், பவ்யா ஸ்ரீ, தேஜாஸ்ரீ ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உஷா, ரூபா ஆகியோர் படுங்காயங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றனர். தஞ்சை தமிழ் பல்கலைக்கழக காவல்துறையினர், காயமடைந்த உஷா மற்றும் ரூபாவை மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இறந்த மூவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலியான சம்பவம், அப்பகுதியில் பெரும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கார் விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
