பொதுவாக பண்டிகை என்றாலே கொண்டாட்டம்தான் .தீபாவளிக்கு பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி புத்தாடை அணிந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கொண்டாடுவார்கள். அந்த வகையில் இந்த வருடம் அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. தீபாவளி பண்டிகை சமயத்தில் ஒரு நாளைக்கு முன்பு அல்லது பின்பு தேவைக்கேற்ப அரசு விடுமுறை விட்டு வருகிறது. அதற்கு பதிலாக அந்த மாதத்தில் ஒரு சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டு ஈடு செய்யப்படுகிறது. எனவே இந்த வருடமும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் விடுமுறை விட வேண்டும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இப்போதே கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
ஏற்கனவே தீபாவளிக்கு முன்பே இரண்டு நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கமாக விடுமுறை நாள் கணக்கில் வந்துவிடுகிறது. தீபாவளிக்கு அடுத்த நாளும் விடுமுறை விடப்பட்டால் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும். பண்டிகையையும் சொந்த ஊரில் சென்று கொண்டாடிவிட்டு வருவதற்கு நல்ல சூழல் ஏற்படும். கடந்த வருடமும் இது போல தான் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை முன்கூட்டியே அறிவித்தால் ரயில், பஸ் டிக்கெட் முன்பதிவு செய்ய வசதியாக இருக்கும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான மற்றும் வித்தியாசமான இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன், தனது தனித்துவமான படங்கள் மூலம் ரசிகர்களின் மனதை…
தமிழக முதலமைச்சராக நடிகர் விஜய் பொறுப்பேற்று பத்து நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், அவருடைய ஆரம்பகால அரசியல் நகர்வுகள் உற்றுநோக்கத்தக்க…
தமிழக அரசியல் களத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சரவையில், அதிமுகவின் எஸ்பி வேலுமணி - சிவி…
தமிழ்நாட்டை உலுக்கிய பிரபல மருத்துவமனைகளின் சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் மாற்றுத்திறனாளிகள், ஏழைத் தொழிலாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட…
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், தற்சமயம் ஆட்சிப் பொறுப்புகளை தீவிரமாக கவனித்து வருகிறார். தினசரி புதிய திட்டங்கள், திடீர்…
கடலூர் மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான விருத்தாசலத்தை மையப்படுத்தி புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று தேமுதிக பொதுச்செயலாளரும், விருத்தாசலம் தொகுதி…