பொதுவாக பண்டிகை என்றாலே கொண்டாட்டம்தான் .தீபாவளிக்கு பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி புத்தாடை அணிந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கொண்டாடுவார்கள். அந்த வகையில் இந்த வருடம் அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. தீபாவளி பண்டிகை சமயத்தில் ஒரு நாளைக்கு முன்பு அல்லது பின்பு தேவைக்கேற்ப அரசு விடுமுறை விட்டு வருகிறது. அதற்கு பதிலாக அந்த மாதத்தில் ஒரு சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டு ஈடு செய்யப்படுகிறது. எனவே இந்த வருடமும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் விடுமுறை விட வேண்டும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இப்போதே கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
ஏற்கனவே தீபாவளிக்கு முன்பே இரண்டு நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கமாக விடுமுறை நாள் கணக்கில் வந்துவிடுகிறது. தீபாவளிக்கு அடுத்த நாளும் விடுமுறை விடப்பட்டால் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும். பண்டிகையையும் சொந்த ஊரில் சென்று கொண்டாடிவிட்டு வருவதற்கு நல்ல சூழல் ஏற்படும். கடந்த வருடமும் இது போல தான் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை முன்கூட்டியே அறிவித்தால் ரயில், பஸ் டிக்கெட் முன்பதிவு செய்ய வசதியாக இருக்கும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…