மக்களே உஷார்… தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் புரட்டி எடுக்க போகும் கனமழை… காலையிலேயே வந்த அலர்ட்…!!

By Nanthini on கார்த்திகை 22, 2025

Spread the love

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 24ஆம் தேதி தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்க கடல் பகுதியில் மேலும் வலுப்பெறும். இதனால் தமிழகத்தில் இன்று ஒரு சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. இன்று முதல் நவம்பர் 27ஆம் தேதி வரை பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கனைத்துள்ளது.

தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேசமயம் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.