Rain Alert: தமிழகத்திற்கு இன்று 16 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்… பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா..?

By Nanthini on ஆவணி 4, 2025

Spread the love

தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு 16க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலெடுக்க சுழற்சி நிலவுகிறது.

இதனால் இன்று தமிழகத்தில் 16க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தேனி, தென்காசி, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்யும். குறிப்பாக கோவை, நீலகிரி, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.