தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பல மாவட்டங்களிலும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் கனமழை கொட்டி தீர்த்தது. அதன் பிறகு ஒரு வாரமாக மிதமான வானிலை நிலவி வந்த நிலையில் நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் இன்று 9 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும். எனவே இந்த மாவட்டங்களில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் குடை மற்றும் ரெயின் கோட் ஆகியவற்றை எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
