தமிழகத்தில் கோடை வெயில் தொடங்கிய நாள் முதலே பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று இரவு 7 மணி வரை மாநிலத்தின் 20 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இந்த மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய வட மாவட்டங்களிலும், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி போன்ற தென் மாவட்டங்களிலும் மழைக்கு அதிக வாய்ப்புள்ளது. மேலும் கோவை, நீலகிரி போன்ற மலைப்பகுதிகள் மற்றும் திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்த கத்திரி வெயிலுக்கு இடையே இந்தத் தொடர் மழை, பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் ஒருபுறம் நிம்மதியை அளித்துள்ளது. எனினும், கனமழை பெய்யும் நேரங்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், இடி மின்னல் தாக்காமல் இருக்க மரங்களின் அடியிலோ அல்லது திறந்த வெளியிலோ நிற்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகியது குறித்து தனக்கு எந்தவித கவலையும் இல்லை என்று திமுகவின் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.…
மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோடைக்காலத்தில் மாம்பழங்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகம் …
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. விஜய் தனது அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அவருக்குப்…
தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) ஆதரவு அளிக்காது என்று அக்கட்சியின் மூத்த…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், பள்ளிச் சீருடை அணிந்து தோளில் பையுடன் இருக்கும் சிறுவன் ஒருவன், வெயிலின்…
தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யிடம், பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 118 எம்.எல்.ஏ-க்களின்…