சிகரெட்டுகளில் உள்ள எச்சரிக்கை வாசகத்தை போல சமோசா, ஜிலேபி, பகோடா, டீ பிஸ்கட் போன்ற ஸ்நாக்ஸ்களுக்கும் எச்சரிக்கை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இவற்றில் உள்ள எண்ணெய், சர்க்கரை, டிரான்ஸ் ஃபேட் விவரங்கள் இடம்பெறும். இவற்றால் ஏற்படும் High BP, நீரிழிவு, இதய நோய் மற்றும் உடல் பருமன் பாதிப்புகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக நாக்பூர் எய்ம்ஸ் இல் இந்த முறை அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விரைவில் நாடு முழுவதும் இந்த முறை அமலுக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
