“44 வயதில் நேர்ந்த கொடூரம்”… திரையுலகை உலுக்கிய பிரபல நடிகரின் திடீர் மரணம்… பின்னணியில் இருந்த அதிர்ச்சி காரணம்…!

By Visaka on ஆடி 4, 2026

Spread the love

சின்னத்திரை மற்றும் சினிமா உலகில் சமீப காலமாக இளம் வயது பிரபலங்களின் மரணங்கள் தொடர்கதையாகி வருவது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், கன்னட சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் தன் எதார்த்தமான நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருந்த நடிகர் படுகௌடா (பத்மநாப் கே.எம்.) தனது 44ஆவது வயதில் காலமானார். மாடலிங் துறையில் தன் பயணத்தைத் தொடங்கி, பின்னர் ‘பாட்டே மண்டி கடிகே பந்துரு’ என்ற பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த கன்னட மக்களின் கவனத்தையும் ஈர்த்த இவர், மிகக் குறுகிய காலத்திலேயே மக்களின் அன்பைப் பெற்ற முன்னணி நட்சத்திரமாக உயர்ந்தார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து பிஸியாக இருந்த படுகௌடாவிற்கு, வெள்ளித்திரையிலும் நல்ல வாய்ப்புகள் தேடி வந்தன. பெங்களூருவில் தனது மனைவி மற்றும் மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவருக்கு, கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. தீவிர மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அவருக்கு மூளையில் கட்டி (Brain Tumor) இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து பல்வேறு கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும், மருத்துவர்களின் முயற்சி பலனின்றி அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

   

எப்போதும் சிரித்த முகத்துடன் வலம் வந்த ஒரு திறமையான கலைஞர், இவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டு பிரிவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என சக கலைஞர்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். சமீபகாலமாக மாரடைப்பு, புற்றுநோய், மூளைக்கட்டி போன்ற பாதிப்புகளால் இளம் கலைஞர்கள் உயிரிழப்பது அதிகரித்து வருவது திரையுலகினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களைத் தன் திறமையால் சிரிக்க வைத்த படுகௌடாவின் இந்த திடீர் மறைவு, அவரது குடும்பத்தினருக்கும் கன்னட திரையுலகிற்கும் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.