கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டம் கானாப்புரா தாலுகா நந்தகடா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பீதி கிராமத்தை சேர்ந்த ஆனந்த்ராஜ் சுதாரா (30). இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர் அதே கிராமத்தை சேர்ந்த மஞ்சுளாவின் வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு ஆனந்த்ராஜ் சென்றார். ஆனந்த்ராஜ், மஞ்சுளாவை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தன்னைத் தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டார்.
இருவரும் திருமணம் ஆகிய நிலையிலும் இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. மஞ்சுளாவின் கணவருக்கு இந்த விவரம் தெரிந்து போலிசில் புகார் அளித்துள்ளார் அதை எடுத்து போலீசார் ஆனந்த்ராஜை கண்டித்துள்ளனர். அதனால் ஆனந்த்ராஜ் மஞ்சுளாவையும் கொன்றுவிட்டு, அவரும் தற்கொலை செய்து கொண்டார் இதை பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
