#image_title
வெறும் எலக்ட்ரானிக் கால்குலேட்டர் விற்பனை செய்யும் நிறுவனத்தில் ஆரம்பித்து என்று உலகின் புகழ்பெற்ற IT நிறுவனமான HCL-ன் தந்தையாக விளங்குபவர் ஷிவ் நாடார். தமிழகத்தின் கடைக்கோடி கடற்கரை நகரமாம் தூத்துக்குடி, திருச்செந்தூர் அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் சிவசுப்ரமணிய நாடார் என்பவருக்கு மகனாகப் பிறந்தார் ஷிவ் நாடார். இவரது தாய் தினத்தந்தி நிறுவனர் ஆதித்தனாரின் தங்கை ஆவார்.
#image_title
பள்ளிப் படிப்பை கும்பகோணத்திலும், பொறியியல் படிப்பை கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியிலும் முடித்த ஷிவ் நாடார் புனேவில் உள்ள வால்கூப்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தில் மிகச் சாதாரண பொறியாளராக தன் வாழ்க்கையைத் தொடங்கினார். அவருக்குள் இருந்த முதலாளி ஆசை துளிர்விட தன் நண்பர்களுடன் இணைந்து மைக்ரோகார்ப் என்ற கால்குலேட்டர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை ஆரம்பித்தார்.
#image_title
அதன்பின் 1976-ல் அவர் எடுத்த முடிவுதான் இன்று IT உலகையே ஆட்டுவிக்கிறது. ஆம். தன்னிடம் இருந்த 1.87 லட்சம் பணத்தைக் கொண்டு HCL நிறுவனத்தை ஆரம்பித்தார். ஐடி துறையில் இவரது நிறுவனம் ஆரம்பம் முதலே ஒரு முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது. ஊழியர்கள் நலனில் இவர் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும் ஷிவ் நாடார் தன் நிறுவனத்தில் சிறப்பாகப் பணியாற்றும் ஊழியர்களுக்கு கார் பரிசளிப்பது, ஊதியத்துடன் கூடிய சுற்றுலா விடுமுறை வழங்குவது போன்ற சலுகைகளை அளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.
கல்லடி பட்டும் கண்ணதாசனுக்கு குசும்ப பார்த்தீங்களா..? வழிந்த ரத்தத்திலும் ததும்பிய காதல் கானம்..
அதனால்தான் HCL நிறுவனத்தில் பணியாற்ற பலரும் போட்டி போட்டுக் கொண்டு விண்ணப்பம் செய்கின்றனர். இதுமட்டுமின்றி தன் நிறுவனத்தின் பெரும் பங்கினை நன்கொடையாக வழங்குவதில் ரத்தன் டாடாவைப் போல் ஷிவ் நாடாரும் சிறந்து விளங்குகிறார். அதிலும் குறிப்பாக கல்விச் சேவையில் இவர் ஆற்றும் பங்கு அதிகம். சென்னையில் இன்று பிரபலமாக விளங்கும் SSN பொறியியல் கல்லூரி இவரது தந்தை சிவசுப்பிரமணிய நாடார் நினைவாக இது தொடங்கப்பட்டது.
#image_title
மேலும் இவரது ஷிவ் நாடார் அறக்கட்டளை பல்வேறு உதவிகளை முடியாதவர்களுக்கும், கல்வி பயில்வோருக்கும் வழங்கி வருகிறது. இந்திய அரசு IT துறையில் இவர் செய்த சாதனைகளுக்காக பத்மபூஷன் விருது வழங்கிச் சிறப்பித்தது. மேலும் பல விருதுகளைப் பெற்ற ஷிவ் நாடார் இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முன்னணியில் உள்ளார்.
அமெரிக்காவில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வரும் நிதின் மல்ஹோத்ரா என்ற இந்தியர், அங்குள்ள மருத்துவக் கட்டணங்களின் கொடூர நிதர்சனத்தைச்…
இரவு நேரத்தில் பெய்த கனமழைக்கு நடுவே, வாலிபர் ஒருவர் தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பைக்கின் பின்னால் அமைக்கப்பட்டிருந்த…
நலசோபரா கிழக்கு பகுதியிலுள்ள ஒய்.பி. நகர் டெரஸில் கிரில் அமைப்பது தொடர்பாக இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் மாவட்டத்தில் முதலமைச்சர் யோகி ஆதிநாத்தின் வருகையின்போது, 9 மாதங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட 10 வயது…
உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு குடும்பத் தகராறு இணையத்தில் பெரும் வைரலாகியுள்ளது. கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட மோதலில், மனைவி…
உத்திரப்பிரதேசம் மாநிலம், புலந்த்ஷெர் மாவட்டம் ஜஹாங்கிராபாத் பகுதியில் நாயைக் காப்பாற்ற முயன்றபோது அதிவேகமாக வந்த கார் மின் கம்பத்தின் மீது…