“உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம்!”.. தோழியின் கணவருடன் உல்லாசம்.. பூட்டிய அறைக்குள் காத்திருந்த அதிர்ச்சி… கேரளாவை உலுக்கிய ‘கிளைமாக்ஸ்’…!!!

Spread the love

திருச்சூர் மாவட்டம் மாளா அருகே உள்ள சினேகபுரியைச் சேர்ந்த 30 வயது டிரைவர் ஸ்ரீஜித்துக்கும், அவரது மனைவி அஞ்சனாவின் தோழியான 24 வயது மில்னாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பேக்கரி உரிமையாளர் பாபுவின் மகளான மில்னா, தோழி அஞ்சனாவின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தபோது ஸ்ரீஜித்துடன் காதல் வயப்பட்டுள்ளார். இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் அஞ்சனாவுக்குத் தெரியவரவே, அவர் இருவரையும் கண்டித்து கடும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

தங்கள் உறவை அஞ்சனா எதிர்த்ததால் ஆத்திரமடைந்த ஸ்ரீஜித், கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவியைத் தாக்கியுள்ளார். கணவரின் நடத்தை மற்றும் தோழியின் துரோகத்தால் மனமுடைந்த அஞ்சனா, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவர், தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சூழலிலும் மில்னாவுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்ட போதிலும், அவர் ஸ்ரீஜித்துடனான தொடர்பைக் கைவிட மறுத்து வந்துள்ளார்.

கடந்த 24-ம் தேதி பேக்கரிக்குச் சென்ற மில்னா வீடு திரும்பாததால், அவரது தந்தை பாபு போலீசில் புகார் அளித்தார். மில்னாவின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது, அவர் ஸ்ரீஜித்தின் வீட்டில் இருப்பது உறுதியானது. போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது வீடு உள்புறமாகப் பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசார், ஸ்ரீஜித் மற்றும் மில்னா ஆகிய இருவரும் தூக்கில் பிணமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அவர்கள் தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், தங்கள் காதலைக் கண்டித்த அஞ்சனா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தங்களை மனதளவில் பாதித்ததாகவும், அதனால் இனி வாழப் பிடிக்காமல் ஒன்றாக உயிரை விடுவதாகவும் குறிப்பிட்டிருந்தனர். இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்கொலை முயற்சி மற்றும் இரட்டை மரணம் என அடுத்தடுத்து நடந்த இந்தத் துயரச் சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

அமெரிக்க கப்பல்களை தாக்க டால்பின்களை பயன்படுத்தும் ஈரான்..? புது டெக்னாலஜியால் மிரண்டு போன டிரம்ப்… பெரும் பரபரப்பு..!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…

3 மணத்தியாலங்கள் ago

3 வயது சிறுவனை.. 30 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற தெருநாய்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வைரல்…!

கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…

3 மணத்தியாலங்கள் ago

உலகையே அதிர வைத்த வினோத விழிப்புணர்வு! வெண்கல மணிக்குள்ளே நிர்வாணமாகத் தொங்கிய கலைஞர்..வைரலாகும் ஷாக் வீடியோ..!

வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…

4 மணத்தியாலங்கள் ago

ஒரே நொடி.. பதற வைக்கும் விபத்து..! மின்னல் வேகத்தில் பிரேக் போட்ட கார் டிரைவர் – ஜாபுவாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…

4 மணத்தியாலங்கள் ago

விஜய்யின் முதல்வர் பதவியேற்பு விழா ரத்து..? கடைசி நேரத்தில் அதிர்ச்சி.. நாளை நடக்கப்போவது என்ன..??

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…

4 மணத்தியாலங்கள் ago

“தலைவருக்காக என் பதவியை ராஜினாமா செய்யத் தயார்” முதல்வரிடம் தமிமுன் அன்சாரி உருக்கம்… ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை..!!

சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…

4 மணத்தியாலங்கள் ago