தமிழகச் சட்டமன்றத் தேர்தல் கடந்த 23-ஆம் தேதி நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போதைய அரசியல் களம் மிகுந்த எதிர்பார்ப்புடன் காணப்படுகிறது. ஆட்சியைத் தக்கவைக்க திமுகவும், மீண்டும் அரியணை ஏற அதிமுகவும் தீவிரமாகப் போராடி வரும் நிலையில், நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் இந்தத் தேர்தலில் ஒரு வலுவான நான்கு முனைப் போட்டியை உருவாக்கியுள்ளன. குறிப்பாக, நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) இந்தத் தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து வரும் முதற்கட்டத் தகவல்கள் சாதகமாக இருப்பதால், விஜய் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
தேர்தலுக்குப் பிந்தைய ஆய்வுகளில் தவெகவிற்கு கணிசமான வாக்குகள் கிடைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட விஜய்யிடம், “தமிழகம் முழுவதும் நமது ‘விசில்’ சின்னத்திற்கு சுமார் ஒன்றரை கோடிக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளன; சுமார் 140 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியுள்ளது” என நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதனைத் கேட்டு மகிழ்ச்சியடைந்த விஜய், தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வரும் வரை கட்சியினர் அமைதியாகவும், அதேசமயம் மிகுந்த விழிப்புடனும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மாநில அளவில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாகக் கருதப்படும் 40 வேட்பாளர்கள் மற்றும் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா போன்ற முக்கிய நிர்வாகிகளை அழைத்து பனையூர் அலுவலகத்தில் சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களுக்குத் தேர்தல் நடைமுறைகள் குறித்துத் தனி வகுப்பே எடுக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’ பாதுகாப்பை உறுதி செய்வதும், வாக்கு எண்ணிக்கையின் போது ஏஜெண்டுகள் எவ்வாறு விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதும் இதில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் நிலவும் கடும் போட்டி காரணமாக, வாக்குகள் பல முனைகளில் சிதறியுள்ளன. இதனால் மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி-தோல்விகள் தீர்மானிக்கப்படும் என்பதை விஜய் சுட்டிக்காட்டியுள்ளார். திமுக மற்றும் அதிமுக போன்ற அனுபவம் வாய்ந்த கட்சிகள் வாக்கு எண்ணிக்கையின் போது தில்லுமுல்லுகளில் ஈடுபட வாய்ப்புள்ளதாகக் கருதும் விஜய், “கடந்த காலங்களில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்று, பின் நீதிமன்றம் சென்றும் பலனில்லாமல் போன சம்பவங்கள் பல உண்டு. எனவே, வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு வாக்குகளையும் மிகுந்த எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டும்” எனத் தனது வேட்பாளர்களுக்குக் கறாரான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…
கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…
வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…
சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…