Categories: சினிமா

விக்ரம் படத்துக்கு பிளைட்லயே ஒரு பாட்டு கம்போஸ் பண்ணேன்.. போற வரவங்க எல்லாம் திரும்பி திரும்பி பார்த்தாங்க.. ஹாரிஸ் ஜெயராஜ் ஓபன் டாக். !

Spread the love

தமிழ் சினிமாவில் உலகத் தரம் வாய்ந்த ஸ்டூடியோ வைத்துள்ள இசை அமைப்பாளர் என்றால் அது ஹாரிஸ் ஜெயராஜ் என்றுதான் சொல்ல வேண்டும். அவருடைய இசை மற்ற இசை அமைப்பாளர்களை விட வித்தியாசமாக இருப்பது மட்டுமல்லாமல் தனித்துவமாக இருப்பதால் என்னவோ அவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அவரை ரசிகர்கள் அனைவரும் ஹாரிஸ் மாம்ஸ் என அழைக்கிறார்கள். கடந்த 2001 ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குனராக அறிமுகமான மின்னலே திரைப்படம் மூலமாகத்தான் ஆரிஸ் ஜெயராஜ் இசை அமைப்பாளராக அறிமுகமானார்.

அந்த காலகட்டத்தில் ஏற்கனவே ஏ ஆர் ரகுமான், தேவா மற்றும் யுவன் சங்கர் ராஜா என பலரும் ஜாம்பவான்களாக உயர்ந்து நின்று கொண்டிருக்கும் போது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன்னுடைய இசையால் ஹாரிஸ் ஜெயராஜ் திரும்பி பார்க்க வைத்தார். அந்தத் திரைப்படம் தான் இவருடைய முதல் படம் என யாராவது கூறினால் பலரும் அதனை ஏற்க மாட்டார்கள். ஏனென்றால் தன்னுடைய முதல் படத்திலேயே இசையில் ரசிகர்களை வசியப்படுத்தும் அளவுக்கு இசையமைத்திருந்தார். அதன் பிறகு பல இயக்குனர்களுடன் ஹாரிஸ் ஜெயராஜ் இணைந்து பணியாற்றியுள்ளார். தற்போது முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் ஹாரிஸ் ஜெயராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில், விக்ரமின் இருமுகன் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டின் போது நான் ஜெர்மனிக்கு சென்று கொண்டிருந்தேன். அப்போ திடீர்னு போன் பண்ணி விக்ரம் பிறந்தநாள் வருகிறது ட்ரெய்லர் ரிலீஸ் பண்ண போறோம் பாட்டு கம்போஸ் பண்ணி கொடுங்க என்று சொல்லிட்டாங்க. எனக்கு அப்போ என்ன பண்றதுனே தெரியல. நைட்டு பிளைட் ஏறுறதுக்குள்ள சின்னதா ஒரு கீபோர்டு கம்ப்யூட்டர் எல்லாத்தையும் வாங்கிட்டேன்.

பக்கத்துல இருக்க யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காத மாதிரி எல்லாத்தையும் சின்ன சின்னதா வாங்கி வைத்திருந்தேன். ஹெலனா பாட்டு ஃப்ளைட்ல வரவர தான் கம்போஸ் பண்ண. அதுவும் பைட் சீனுக்கு மியூசிக் போட சொல்லிட்டாங்க. அப்போ பிளைட்ல இருக்க பணி பெண்கள் எல்லோரும் போகும்போது வரும்போது என்ன பாத்துட்டே இருந்தாங்க. எப்படியோ ஒரு வழியா பிளைட் ரீச் ஆவதற்கு முன்னாடி பாட்டு கம்போஸ் பண்ணி முடிச்சிட்டேன் என்று இருமுகன் படத்திற்கு பாட்டு கம்போஸ் பண்ண சுவாரஸ்யமான சம்பவத்தை ஹாரிஸ் ஜெயராஜ் பகிர்ந்துள்ளார்.

Nanthini

Recent Posts

“பெண்ணை கட்டிப்போட்டு அண்ணனும் தம்பியும் செய்த காரியம்.. செல்போனில் வீடியோ எடுத்த அவலம்.. ஆந்திராவில் அரங்கேறிய பயங்கர சம்பவம்”..!!

ஆந்திர மாநிலம் நகரிக்கல்லு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண், தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு 3 மகள்களுடன்…

3 minutes ago

BREAKING: திமுக -காங்., கூட்டணி… திடீர் திருப்பம்… தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு….!

ஜூன் 8-ஆம் தேதி நடைபெறவுள்ள 'இண்டியா' கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது என்று அக்கட்சியின் தலைமை அதிரடியாக அறிவித்துள்ளது. கடந்த…

3 minutes ago

ஸ்வீடனிலிருந்து வந்த ஒரு கால்… ஆபத்தில் மயங்கிக் கிடந்த முதியவரை காப்பாற்றிய… மதுரை தீயணைப்பு வீரர்கள்..! நெட்டிசென்களின் மனதை நெகிழ வைத்த சம்பவம்…!!

மதுரை அண்ணா நகர் பகுதியில் தனியாக வசித்து வரும் முதியவர் ஒருவரை, ஸ்வீடனில் இருந்து வந்த அவசர அழைப்பின் பேரில்…

13 minutes ago

“‘ஐஸ் வைக்கிறதுக்கு ஒரு எல்லை இல்லையா?’.. பதவியேற்ற உடனே பக்தி அவதாரம்.. சிவபெருமானாக மாறிய டி.கே.சிவகுமார்.. கர்நாடகாவில் வெடித்த புது அரசியல் புயல்..!!

கர்நாடகாவில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த முதல்வர் நாற்காலிப் போட்டி ஒருவழியாக முடிவுக்கு வந்து, டி.கே. சிவகுமார் புதிய முதல்வராகப்…

15 minutes ago

பாஜக பருப்பு இனி வேகாது.. “6 வருஷத்துக்கு அப்புறம் தான் அண்ணாமலைக்கு புத்தி வந்ததா?”…. கரூரில் ஜோதிமணி சொன்ன ‘பகீர்’ பின்னணி…..!

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, தமிழக அரசியல் சூழல், வரவிருக்கும் மாநிலங்களவை (ராஜ்யசபா)…

17 minutes ago

வெறும் ஆரம்பம் தான்… 25 நாட்களில் 18,600 கோடி முதலீடு.. கெத்து காட்டிய முதல்வர் விஜய்….. தமிழகத்தை மாற்றப்போகும் ‘அந்த’ 3 திட்டங்கள் என்ன தெரியுமா…?

தமிழகத்தில் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற வெறும் 25 நாட்களிலேயே, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த…

23 minutes ago