Categories: சினிமா

நான் முதல் முதலாக இசையமைப்பாளர் ஆனது ‘மின்னலே’ படத்தில் இல்லை… ஹாரிஸ் ஜெயராஜ் பகிர்ந்த ஆச்சர்ய தகவல்!

Spread the love

இந்தி சினிமா பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த தமிழ் ரசிகர்களை தமிழ் பாடல்கள் பக்கம் திருப்பியவர் இளையராஜா என்றால், இந்தி ரசிகர்களையும் தமிழ் சினிமா பாடல்களைக் கேட்க வைத்தவர் ஏ ஆர் ரஹ்மான் என்று சொல்வார்கள். 1992 ஆம் ஆண்டு அறிமுகமான ரஹ்மான் அதன் பின்னர் 10 ஆண்டுகள் இந்திய சினிமாவையே ஆண்டுகொண்டிருந்தார்.

அப்போதுதான் அவருக்கு ஒரு போட்டியாளராக தமிழ் சினிமாவில் இருந்து வந்தார் ஹாரிஸ் ஜெயராஜ். 2001 ஆம் ஆண்டு மின்னலே திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜ் தொடர்ந்து 9 ஆண்டுகளாக பிலிம்பேர் விருதை வாங்கிவந்த ஏ ஆர் ரஹ்மானிடம் இருந்து அதை தட்டிப்பறித்தார்.

அதன் பின்னர் அடுத்த 10 ஆண்டுகள் அவர் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டு தமிழ் சினிமாவில் ரஹ்மானுக்கு இணையான ரசிகர் கூட்டத்தைக் கொண்ட இசையமைப்பாளராக வளர்ந்தார். அவர் பாடல்கள் சர்ச் பாடல்களின் ட்யூன்களை காப்பியடித்தது போல இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

harris jayaraj

ஆனாலும் அவர் பாடல்கள் தொடர்ந்து சூப்பர்ஹிட்டாகி கலக்கின. இடையில் அனிருத்தின் வருகைக்குப் பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் தன்னுடைய மார்க்கெட்டை இழந்தார். இடையில் லெஜண்ட் போன்ற பாடல்களுக்கு இசையமைத்தாலும் அவரால் தன்னுடைய பழைய ஃபார்முக்கு திரும்ப முடியவில்லை. இப்போது அவர் ஜெயம் ரவி நடிக்கும் பிரதர் படத்துக்கு இசையமைத்துள்ளார். அந்த படத்தில் இடம்பெற்றுள்ள மகாமிஷி என்ற பாடல் வைரல் ஹிட்டாகியுள்ளது.

இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ஹாரிஸ் ஜெயராஜ் “நான் 2001 ஆம் ஆண்டு வெளியான மின்னலே படத்தின் மூலமாக இசையமைப்பாளர் ஆகவில்லை. அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னரே மோகன் ராஜா இயக்கிய ஒரு குறும்படத்துக்குதான். அந்த படத்துக்குதான் என் பெயர் முதல் முறையாக இசையமைப்பாளர் என்று வந்தது” எனப் பேசியுள்ளார்.

vinoth

Recent Posts

பகீர்..! விளையாட்டில் ஏற்பட்ட மோதல்.. 12 வயது சிறுவனின் கண்களை குத்திக் கிழித்த கொடூரம்.. பக்கத்து வீட்டாரின் கொடூரச்செயல்..!!

பீகாரில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் மனிதநேயமற்ற செயலின் உச்சமாக அமைந்துள்ளது. வெறும் 12 வயதே ஆன சன்னி என்ற…

28 minutes ago

“சந்து பொந்தெல்லாம் சேஸிங்”… கடைசியில் நேர்ந்த விபரீதம்… லூதியானாவில் நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்…!

லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…

1 மணத்தியாலம் ago

Breaking: கடைசி நேர அரசியல் டுவிஸ்ட்… திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகச் சிக்கிய கோடிகள்… ஸ்டாலினுக்கு செம ஷாக்…!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…

1 மணத்தியாலம் ago

“எனக்கு கன்னிப்பெண் தான் வேணும்”… ஐஐடி மாப்பிள்ளையின் விசித்திர நிபந்தனை… மேட்ரிமோனி மேனேஜரின் அதிரடிப் பதிவு…!

கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…

2 மணத்தியாலங்கள் ago

“அம்மா வலிக்குது…” சிறுவனின் கதறலை அலட்சியம் செய்த பெற்றோர்….! தலையணை அடியில் காத்திருந்த எமன்…!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago