சற்றுமுன்: தமிழக அரசியல் தலைவர் அதிரடி கைது…. காலையிலேயே பரபரப்பு…!

By Nanthini on தை 10, 2026

Spread the love

கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு பல கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, சுமார் 70 லட்சம் ரூபாய் கமிஷன் பெற்று மோசடி செய்த வழக்கில், பனங்காட்டு படை கட்சித் தலைவர் ஹரி நாடாரின் கூட்டாளி ரஞ்சித் என்பவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த மோசடி கும்பல், பெரும் தொகையை கடனாகப் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறி, அதற்கான முன்பணமாகவும் சேவை வரி என்ற பெயரிலும் இந்தத் தொகையை வசூலித்து ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே இதேபோன்ற பல மோசடி புகார்களில் ஹரி நாடர் சிறையில் உள்ள நிலையில், தலைமறைவாக இருந்த ரஞ்சித்தை போலீசார் தற்போது பிடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ரஞ்சித், ஹரி நாடாருடன் நெருங்கிய தொடர்பு கொண்டு இந்த நிதி மோசடிகளில் முக்கிய மூளையாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தொழிலதிபர் அளித்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், தொழில்நுட்ப உதவியுடன் ரஞ்சித்தின் இருப்பிடத்தைக் கண்டறிந்து அவரைப் பிடித்துள்ளனர். இந்த கும்பலால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் பலர் இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். கைதான நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.