டெல்லியில் இருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் நடந்த ஒரு வினோதமான சம்பவம் இணையத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. விமானத்தின் கேபின் குறைபாடு பதிவு புத்தகத்தில் ஒரு பணியாளர் எழுதிய குறிப்பு வைரலாகி வருகிறது. அதாவது ‘உயிருள்ள கரப்பான் பூச்சி’ ‘சாகும் வரை தூக்கிலிடப்பட்டது’ என்று குறிப்பிட்டதைத் தொடர்ந்து வைரலாகியுள்ளது.
View this post on Instagram
அக்டோபர் 24, 2025 தேதியிட்ட இந்த அசாதாரண பதிவு, இந்தியாவின் மிகவும் பரபரப்பான சர்வதேச வழித்தடங்களில் ஒன்றில் இயங்கும் ஏர் இந்தியா விமானத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கையால் எழுதப்பட்ட குறிப்பின் புகைப்படம் சமூக ஊடகங்களில் விரைவாக வைரலாகியது. அதிகாரப்பூர்வ பராமரிப்பு அறிக்கையில் பயன்படுத்தப்பட்ட சொற்றொடரை நம்ப முடியாத பயனர்களிடமிருந்து சிரிப்பு, மீம்ஸ்கள் மற்றும் நகைச்சுவையான எதிர்வினைகளைத் தூண்டியது.
