ஜார்ஜர் மாவட்டத்தை சேர்ந்த மோகித் குமார் (23), அனுஜ் குமார் (25) ஆகியோர் தார் வகை காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது காரை நிறுத்தாமல் கதவை திறந்து பொதுவெளியில் அசிங்கமாக சிறுநீர் கழித்துள்ளனர். இதனை வெளியே இருந்து கண்ட பொதுமக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ளன. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலருடைய கண்டனங்களையும் பெற்றதை தொடர்ந்து போலீசார் உடனடியாக அந்த இருவரையும் கைது செய்தனர். விசாரணையில் அனுஜ் காரை ஓட்டியதும் மோகித் கதவை திறந்து சிறுநீர் கழித்ததும் தெரியவந்தது.
அதேசமயம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் மோகித் குமாருக்கு முன்பே கொலை, தாக்குதல் மற்றும் சட்டவிரோத ஆயுதம் வைத்திருத்தல் குறித்த பல வழக்குகள் இருப்பதுடன் 2022 டிசம்பர் மாதத்தில் ஜாமினில் வெளிவந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் சட்டத்தை மீறி பொதுவெளியில் அருவருப்பான செயல்களை நிகழ்த்துவோர்க்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சமூக ஊடகங்களில் குரல் எழுந்துள்ளது.
மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…