கூகுள் தேடலில் கொடூர ஐடியா.. பிரியாணி அண்டா, 14 லிட்டர் வினிகர்…. கூடுவாஞ்சேரி கொலையில் வெளிவந்த பயங்கரம்…. தம்பதி கொடுத்த பகீர் வாக்குமூலம்….!

By Nanthini on புரட்டாதி 3, 2026

Spread the love

சென்னை புறநகர்ப் பகுதியான கூடுவாஞ்சேரியில் அரங்கேறியுள்ள ஹயாத்துன் நிஷா என்ற பெண்ணின் படுகொலை சம்பவம், பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் உறைையையும் ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹயாத்துன் நிஷா, குடும்பத் தகராறு காரணமாகக் கணவரைப் பிரிந்து தனது மகனுடன் சென்னை வந்து தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அங்கு பணிபுரிந்த மாணிக் உத்தீன் லஸ்கர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. மாணிக் உத்தீனின் மனைவி பகாபதி மாஜியும் இந்த உறவுக்கு ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, மூவரும் கூடுவாஞ்சேரியில் ஒரே வீட்டில் வாடகைக்குத் தங்கி வந்துள்ளனர்.

இந்நிலையில், இரண்டு மாத கர்ப்பிணியான ஹயாத்துன் நிஷா, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு மாணிக் உத்தீனை வற்புறுத்தியுள்ளார். ஆனால், கருவைக் கலைக்க தம்பதியினர் வலியுறுத்தியதால் இரு தரப்பிற்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டுள்ளது. நிஷா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் போவதாக மிரட்டியதால், ஆத்திரமடைந்த தம்பதியினர் அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டனர். கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி உணவில் விஷம் கலந்து கொடுத்து நிஷாவைக் கொன்ற தம்பதியினர், சடலத்தை யாருக்கும் தெரியாமல் எப்படி அழிப்பது என்பது குறித்து கூகுளில் தீவிரமாகத் தேடியுள்ளனர்.

   

கொலையை மறைப்பதற்காகத் தம்பதியினர் கையாண்ட கொடூர வழிமுறைகள் காவல்துறையினரையே திடுக்கிட வைத்துள்ளன. சடலத்தை பாத்ரூமிற்கு எடுத்துச் சென்று துண்டு துண்டாக வெட்டிய மாணிக் உத்தீன், உடலின் சதைப்பகுதிகளைப் பிரித்தெடுத்து பிரியாணி அண்டாவில் போட்டுள்ளார். சதையை மாவு பதத்திற்கு மாற்றுவதற்காக 14 லிட்டர் வினிகர் மற்றும் கெமிக்கல்களை ஊற்றி, பாத்திரத்தின் மூடியை மைதா மாவால் காற்று புகாதவாறு பூசி வைத்துள்ளனர். எஞ்சிய எலும்புகளைத் துண்டாக்கி பிளாஸ்டிக் பைகளில் அடைத்து டிராலி பெட்டியில் வைத்துள்ளனர்.

   

பின்னர் ஆகஸ்ட் 3-ஆம் தேதி அந்த டிராலி பெட்டியைப் புறநகர் ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் கொண்டு சென்று, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் போட்டுவிட்டுத் தப்பியுள்ளனர். தொடர்ந்து ஆகஸ்ட் 6-ஆம் தேதி விமானம் மூலம் அசாம் தப்பிச் சென்ற இந்த தம்பதியை, தீவிர விசாரணைக்குப்பின் ஒடிசாவில் வைத்துப் போலீசார் கைது செய்தனர். தாம்பரம் காவல் நிலையத்தில் 12 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற தீவிர விசாரணையில், குற்றவாளிகள் தங்களது கொடூரச் செயலை முழுமையாக ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளனர்.