அஜித் குமார் மரணம்.. அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்…. பெரும் பரபரப்பு…!

By Nanthini on கார்த்திகை 22, 2025

Spread the love

மதுரை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகைத் திருட்டு புகாரில் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் முதலில் சூடு பிடித்த சிபிஐ விசாரணையில் தற்போது சுனக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது. உரிய நேரத்தில் நீதிமன்றத்தில் குற்ற பத்திரிக்கையை சிபிஐ தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் வருகின்ற நவம்பர் 27ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு அன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அஜித் குமார் கொலை குறித்த மேலும் பல உண்மைகள் குற்ற பத்திரிக்கையில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.