தென்கொரியாவை சேர்ந்த தாய் ஒருவர் நான்கு மாத குழந்தையுடன் சியோலில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவிற்கு விமானத்தில் பயணம் செய்தார். அப்போது அவருடைய 10 மணி நேரம் நீண்ட விமான பயணத்தின் போது குழந்தை அழலாம் என்று எண்ணி சக பயணிகளை சங்கடப்படுத்தாமல் இருப்பதற்காக அசத்தலான யோசனை ஒன்றை செய்துள்ளார். அதன்படி விமானத்தில் இருந்த சுமார் 200 பயணிகளுக்கும் அந்த தாய் தனிப்பட்ட முறையில் சிறிய பிளாஸ்டிக் பை ஒன்றைக் கொடுத்தார். அதில் மிட்டாய்கள் சுயங்கம் மற்றும் காது செருகிகள்(earphone) போன்றவை இருந்தது. அதோடு பையில் ஒரு குறிப்பு எழுதப்பட்டிருந்தது. அந்த குழந்தையின் சார்பாக எழுதப்பட்டிருந்தது.
அதில் வணக்கம் நான் ஜான் வூ. நான் 4 மாத குழந்தை. இன்று என் அம்மா மற்றும் பாட்டியுடன் என் அத்தையின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அமெரிக்க செல்கிறேன். இது என்னுடைய முதல் விமான பயணம். எனக்கு கொஞ்சம் பயமாகவும் பதட்டமாகவும் இருக்கிறது. நான் அழுவது தொந்தரவு செய்வது இயல்பு. அமைதியாக இருக்க முயற்சிப்பேன். ஆனால் என்னால் உறுதியாக சொல்ல முடியாது. என் குரல் அதிகமாக இருந்தால் இதை பயன்படுத்துங்கள் .நல்ல பயணம் அமையட்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
கடல் என்பது இன்னும் முழுமையாகக் கண்டறியப்படாத பல மர்மங்களைக் கொண்டது. விண்வெளியைப் பற்றி அதிகம் அறிந்த மனிதனால், கடலின் 5…
யுகாண்டாவில் உள்ள நைல் நதியின் மிக ஆபத்தான மற்றும் அதிவேகமாகப் பாயும் நீரோட்டத்தில், நபர் ஒருவர் எவ்வித அச்சமுமின்றி மிதந்து…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோவில், பெண் ஒருவர் வாடிய வெள்ளரிக்காய்களைப் பசுமையாகக் காட்டுவதற்காக, அவற்றை செயற்கை…
ஈரோடு மாவட்டம் பர்கூரில் அமைந்துள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் (TANUVAS) கீழ் செயல்படும் கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில்…
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழல், ஒரு விறுவிறுப்பான அரசியல் த்ரில்லர் திரைப்படத்தைப் போலத் திருப்பங்களுக்குப்…
ஐபிஎல் 2026 தொடரில் ஆர்சிபி (RCB) அணிக்கு எதிரான முக்கியமான போட்டிக்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா…