இன்றைய காலகட்டத்தில் என்னதான் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மக்கள் மாறிக்கொண்டிருந்தாலும் ஒரு சிலர் இன்னும் மூடநம்பிக்கைகளை நம்பிக் கொண்டிருக்கின்றன. மந்திரத்தால் எதையும் சாதித்து விட முடியும் என்று பலரும் நம்புவதால் மூட நம்பிக்கைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. இத்தகைய மூடநம்பிக்கைகளால் சில நேரங்களில் விபரீதங்கள் நிகழ்ந்து விடுகிறது. அதன்படி தான் உத்திர பிரதேசம் மாநிலத்தின் பிரயாக்ராஜில் யாஷ் என்ற 16 வயது சிறுவனின் தலையில்லாத உடல் கண்டெடுக்கப்பட்டது.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தரும் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சிறுவனின் தாய்மொழி தாத்தா சரண்சிங் என்பவரது மகன் மற்றும் மகள் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். இதற்கு தோஷம் இருப்பது தான் காரணம் எனவும் அதை சரி செய்ய பலி கொடுக்க வேண்டும் எனவும் மந்திரவாதி ஒருவர் கூறியுள்ளார். இதனால் தன்னுடைய 16 வயது பேரனை தாத்தா தலையை துடித்து கொடூரமாக கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் அந்த முதியவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
