உத்திரபிரதேசம் அலிகாரில் நவம்பர் 11 ஆம் தேதி, ஜாவா காவல் நிலையப் பகுதியில் உள்ள சந்தோகா கிராமத்தில் வசிக்கும் சந்திரவதி, காயமடைந்து மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டார். சம்பவம் குறித்து அறிந்ததும், அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர், ஆனால் மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். மருத்துவ பரிசோதனையில் அந்தப் பெண்ணின் தலையில் சுடப்பட்டிருப்பது தெரியவந்தது. வயதான பெண்ணின் கொலைக்காக அடையாளம் தெரியாத நபர்கள் மீது குடும்பத்தினர் வழக்குப் பதிவு செய்தனர்.
சந்தேகத்தின் அடிப்படையில், போலீசார் ரவிசங்கரை விசாரணைக்காகக் கைது செய்தனர். கடுமையான விசாரணைக்குப் பிறகு, அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். சந்திரவதியின் பேத்தி ரூபியுடன் பல ஆண்டுகளாக காதல் உறவில் இருந்ததாக ரவிசங்கர் போலீசாரிடம் தெரிவித்தார். அவர்களின் காதல் விவகாரம் பாட்டி சந்திரவதிக்குத் தெரியவந்துள்ளது. தங்கள் காதல் விவகாரத்தை ரகசியமாக வைத்திருக்க, பேத்தி தனது காதலனுடன் சேர்ந்து தனது 65 வயது பாட்டியைக் கொலை செய்துள்ளார். காதலன் பாட்டியின் தலையில் சுட்டுக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாள். கொலை செய்த பிறகு, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பாட்டி கொலை செய்யப்பட்ட இருபத்தி ஒரு நாட்களுக்குப் பிறகு போலீசார் இந்த பரபரப்பான கொலை வழக்கைத் தீர்த்துள்ளனர். பின்னர் பேத்தியும் அவரது கணவரும் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…