வருகின்ற கல்வியாண்டு முதல் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான வினாத்தாள்களில் CBSE மாற்றம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி அறிவியல் வினாத்தாள் A(உயிரியல்), B(வேதியியல்), C(இயற்பியல்) மற்றும் சமூக அறிவியல் வினாத்தாள் A(வரலாறு), B(புவியியல்), C(அரசியல் அறிவியல்), D(பொருளாதாரம்) என பிரிக்கப்படும். இந்தக் கட்டமைப்பில் விடைகளை எழுத தவறினால் மதிப்பீடு செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
