இந்தியாவின் குட்டி விஞ்ஞானிகள்.. வெறும் ₹6,000-ல் பறக்கும் போர் விமானத்தை உருவாக்கிய அரசுப் பள்ளி மாணவர்கள்… வைரல் வீடியோ..!!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டம், அகராபாத் தொகுதியில் உள்ள பிலாவலி அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள், போதிய வசதிகள் இல்லாத சூழலிலும் தங்களது அபார திறமையால் F-22 ராப்டார் போர் விமானத்தின் பறக்கும் மாதிரியை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். 4 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் பிரன்ஷி குமாரி, ஆஷி, ஹிருதேஷ் குமார், ரஞ்சனா குமாரி மற்றும் கார்த்திக் சர்மா ஆகிய ஐந்து மாணவர்கள் ஒன்றிணைந்து இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இவர்களது இந்த முயற்சியின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

சுமார் ₹6,000 என்ற மிகக் குறைந்த செலவில், தெர்மோகோல் போன்ற இலகுரக பொருட்கள் மற்றும் அடிப்படை மின்னணு பாகங்களைக் கொண்டு இந்த மாதிரி விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தங்களது ஆசிரியர் ஆஷிஷ் குமாரின் சிறந்த வழிகாட்டுதலுடன் மாணவர்கள் இத்திட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளனர். இந்த விமானத்தை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்க முடியும் என்பதோடு, இது சுமார் 1 முதல் 1.5 கிலோமீட்டர் தூரம் வரை வானில் பறக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரப் பிரதேச அடிப்படைக் கல்வித் துறையின் “ரோபோடிக்ஸ் கி பாத்ஷாலா 2026” திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாதிரி விமானத்தை நேரடியாக விண்ணில் செலுத்திச் சோதிப்பதற்கு முன்பாக, மாணவர்கள் பள்ளியில் உள்ள கணினி சிமுலேட்டரில் விமானத்தைப் பறக்கவிடும் பயிற்சியை முறையாக மேற்கொண்டுள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களின் இந்தத் தொழில்நுட்பப் புரட்சி, கிராமப்புற மாணவர்களிடையே அறிவியல் மற்றும் ரோபோடிக்ஸ் மீதான ஆர்வத்தை அதிகரிப்பதற்கான ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

Soundarya

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

9 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

10 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

10 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

10 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

10 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

11 மணத்தியாலங்கள் ago