தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நேற்று முன்தினம் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் மல்லிகா என்ற பெண்ணும் உயிரிழந்தார். இவருக்கு பார்வை மாற்றுத்திறனாளியான மகள் கீர்த்திகா என்பவர் உள்ளார். தந்தையும் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் தாயையும் இழந்து பரிதவித்தார் கீர்த்திகா.
இதனையடுத்து தான் MA.BEd படித்துள்ளதாகவும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், என் தாய் இல்லாமல் இனி தனியாக என்ன செய்வேன் என்று அப்பெண் கதறி அழுதிருந்தார். இந்நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், கீர்த்திகாவுக்கு புளியங்குடி நகராட்சி அலுவலகத்தில் டேட்டா எண்ட்ரி பணியானது வழங்கப்பட்டுள்ளது.
