தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. ரஜினி கமல் சரத்குமார் கார்த்திக் விஜய் அஜீத்குமார் என பல ஹீரோக்களின் படங்களில் நடித்தார். அப்போது நடிகை ரம்பாவுடன் இணைந்து நடிகர் கவுண்டமணி பல படங்களில் நடித்திருக்கிறார். அதாவது ரம்பா நாயகியாக நடித்த படங்களில் காமெடி ரோல்களில் கவுண்டமணியும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1990களில் நட்சத்திர நாயகியாக வலம் வந்த நடிகை ரம்பாவுக்கு பரிசாக நடிகர் கவுண்டமணி ஒரு வீடு வாங்கி கொடுத்திருக்கிறார். 34 ஆண்டுகள் கழிந்த நிலையில் இப்போது அந்த வீட்டின் மதிப்பு பல கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. அதனால் அந்த வீட்டை நடிகை ரம்பாவிடமிருந்து கவுண்டமணியின் குடும்பத்தினர் திருப்பி கேட்கின்றனர். ஆனால் விடாப்படியாக ரம்பா அந்த வீட்டை கொடுக்க முடியாது என்று மறுத்து விட்டார். இப்போது இந்த விவகாரம் கோர்ட்டுக்கு சென்று விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது உண்மையா, வதந்தியா என்பது உறுதியாகவில்லை.
