இனி எங்கே போனாலும் நீயே வழித்துணை… புதிய அம்சங்களுடன் கூகுள் மேப்ஸ்… இன்ப அதிர்ச்சியில் பயனர்கள்…!!

By Soundarya on கார்த்திகை 20, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் நம்முடைய செல்போனில் கூகுள் மேப்ஸ் இருந்தாலே நாட்டின் எந்த பகுதிக்கும் தனியாக சென்றுவிடலாம். அந்த அளவிற்கு பிரபல வழிகாட்டி சேவைத்தளமாக கூகுள் மேப் உள்ளது. இந்நிலையில் தற்போது  புதிய புதிய அம்சங்களை கூகுள் மேப்ஸ் தற்போது இணைத்துள்ளது.  AI ஜெமினியுடன் கூகுள் மேப் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் பயனர்கள் தங்களுடைய செல்போனை தொடாமல் நிகழ நேர உரையாடல்களில் ஈடுபட முடியும்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தோடு கூகுள் மேப் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையில் உள்ள போக்குவரத்து தடைகள், மாற்றுப் பாதைகள் குறித்த தகவல்கள் கிடைக்கும். விபத்து ஏற்படக்கூடிய பகுதிகளை நெருங்கும் போது பயனர்களை கூகுள் மேப்ஸ் இப்போது முன்கூட்டியே எச்சரித்து விடும். இருசக்கர வாகன ஓட்டுனர்களுக்கான மேப்ஸ் புதிய அவதார் வசதியும் வழங்குகிறது. வாலாட் இணைப்பும்  வழங்கப்படுகிறது. மெட்ரோ ரயில் டிக்கெட் வாங்க வசதி உள்ள தேவையும் புதிய அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது.