உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் கஜனி பகுதியைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயதுச் சிறுமி ஒருவர், கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி மதியம் வீட்டிலிருந்து திடீரென மாயமானார். குடும்பத்தினர் இரண்டு நாட்களாகப் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.
இதையடுத்து சிறுமியின் பள்ளிப் பையைச் சோதித்துப் பார்த்தபோது, அவரது நோட்டுப் புத்தகத்தில் எழுதப்பட்டிருந்த உருக்கமான கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், “என்னைத் தேட வேண்டாம், நான் என் காதலனுடன் செல்கிறேன். நீங்கள் எனக்கு அவனுடன் திருமணம் செய்து வைக்க மாட்டீர்கள் எனத் தெரியும். நாங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என நினைத்தால் எங்களைத் தேடாதீர்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், தனது தங்கையை ஆசை வார்த்தைகள் கூறித் தன் வசப்படுத்தி கடத்திச் சென்றுவிட்டதாகச் சிறுமியின் அண்ணன் கஜனி காவல் நிலையத்தில் செப்டம்பர் 16 அன்று புகார் அளித்தார். புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து, மாயமான சிறுமியையும் அந்த வாலிபரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் நகரின் முக்கியப் பகுதியான ஆர்.ஆர் சௌரஸ்தா சந்திப்பில், நள்ளிரவு நேரத்தை அதிரவைக்கும் வகையில் ஒரு கொடூரக்…
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கோமதி நகரில், ஓடும் காரின் போனட்டில் பெண் ஒருவர் தொங்கியபடி சென்ற சம்பவம்…
உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள 'வனாந்தரா' ரிசார்ட்டில் வரவேற்பாளராகப் பணியாற்றிய 19 வயது இளம்பெண் அங்கிதா பண்டாரி, கடந்த 2022-ஆம்…
நேபாளத்தில் உள்ள சேதி ஆற்றில் ஒரு நாயைப் பாலம் வழியே உயிருடன் தூக்கி வீசும் அதிர்ச்சியளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில்…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கான்சிராம் கூட்டு மருத்துவமனை மற்றும் அதிர்ச்சி பராமரிப்பு மையத்தில் நெஞ்சை பதறவைக்கும் அவல…
தெலுங்கானா மாநிலம் அச்சம்பேட்டை மண்டலத்தில் உள்ள சிங்காரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொட்டுபல்லி பால்னாரி (68). இவர் நேற்று இரவு தனது…