“வீட்டிற்குச் சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்!… சாலையில் சென்ற காவலரை நசுக்கி கொன்ற ராட்சத கிரேன்.. மகாராஷ்டிராவில் பயங்கரம்”…!!!

Spread the love

மும்பை புறநகர் பகுதியான மன்குர்த் அருகே உள்ள சியோன்-பன்வெல் நெடுஞ்சாலையில், மேம்பாலப் பணியின் போது 200 டன் எடை கொண்ட ராட்சத கிரேன் கவிழ்ந்து விழுந்ததில் காவலர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பை கிழக்கு மண்டல பிரிவில் பொறுப்பு காவலராகப் பணியாற்றி வந்த 48 வயதான சந்தோஷ் சாவன், புதன்கிழமை இரவு 9.45 மணியளவில் தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது டாடா பவர் ஹவுஸ் அருகே எதிர்பாராத விதமாக கிரேன் அவர் மீது கவிழ்ந்தது.

படுகாயமடைந்த காவலர் உடனடியாக வாஷி பகுதியில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கோர விபத்து காரணமாக, செம்பூர் மற்றும் வாஷி பகுதியை இணைக்கும் முக்கிய வழித்தடத்தில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான கிரேனை அகற்றும் பணி நீண்ட நேரம் நீடித்ததால், வாகன ஓட்டிகள் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தனர்.

இந்த விபத்து குறித்து விளக்கம் அளித்த மும்பை மாநகராட்சி அதிகாரிகள், பணித்தளத்தில் இருந்த கனரக வாகனம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாகத் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த காவலரின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில், கட்டுமானப் பணியை மேற்கொண்ட தனியார் ஒப்பந்ததாரர் மற்றும் ஊழியர்கள் மீது அலட்சியமாகச் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மன்குர்த் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Muthu Mani

Recent Posts

பெரம்பூர் டூ திருச்சி…! விஜய்க்கு காத்திருக்கும் அக்னிப்பரீட்சை… டெபாசிட் வாங்கவே ‘இவ்வளவு’ ஓட்டு வேணுமா..?

தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.…

2 minutes ago

“மே 29 முதல் கேதுவின் ‘ராஜயோகம்’ ஆரம்பம்!…சொந்த நட்சத்திரத்திற்கு வரும் கேது…கோடீஸ்வரராகப் போகும் அந்த 4 ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா?”

வேத ஜோதிடத்தில் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது எப்போதும் பின்னோக்கியே சஞ்சரிப்பவை. அந்த வகையில், வரும் மே 29-ஆம்…

3 minutes ago

“டேய் என்னடா பண்ணிவச்சிருக்கீங்க”… மாணவர்கள் விடுதியில் விசிறிக்கு இரும்பு கூண்டு…. காரணத்தை கேட்டா அதிர்ந்து போயிருவீங்க…!

இந்தியாவின் பயிற்சி மையங்களின் தலைநகராக அறியப்படும் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில், மாணவர் விடுதி ஒன்றின் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில்…

4 minutes ago

திருமணமான 3 மாதத்தில் இப்படியா..? மாமனார் செய்த செயல்… விஷம் குடித்து கவலைக்கிடமான நிலையில் மருமகன்.. நடந்தது என்ன..??

பரேலியின் சுபாஷ் நகர் பகுதியில் உள்ள கார்கேனா கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான அஜய் என்பவருக்கும், ஷேகுபூர் பகுதியைச் சேர்ந்த…

9 minutes ago

“16.66% ஓட்டு வாங்கவில்லை என்றால் என்ன ஆகும் தெரியுமா?”… வேட்பாளர்கள் நடுங்கும் ‘டெபாசிட்’ ரகசியம்… தேர்தல் ஆணையம் வைத்துள்ள ‘செக்’….!

இந்தியத் தேர்தல் களத்தில் களம் காணும் வேட்பாளர்கள், தங்களின் வேட்புமனுவைத் தாக்கல் செய்யும்போதே குறிப்பிட்ட தொகையை வைப்புத்தொகையாக (Deposit) செலுத்த…

10 minutes ago

“என் புள்ள மேல கை வைக்குறியா.?” கோபத்தில் பொங்கியெழுந்த தாய்… ஓட ஓட விரட்டி செருப்படி கொடுத்த பரபரப்பு சம்பவம்…!!

ஒரு ரயில் நிலையத்தில் ஒரு பெண் தனது சிறிய மகளுடன் ரயிலுக்காகக் காத்திருந்தார். பயணக் களைப்பு மற்றும் நீண்ட நேரக்…

14 minutes ago