Categories: சினிமா

அமெரிக்காவில் இருந்து குரங்கை வரவழைத்து அதுக்கு பைவ் ஸ்டார் ஓட்டலில் ரூம் போட்டுத் தங்கவைத்த தயாரிப்பாளர்… வசூலில் கலக்கிய திரைப்படம்!

Spread the love

தமிழ் சினிமாவை இந்திய அளவில் கொண்டு சென்றதில் மறைந்த ஜெமினி ஸ்டுடியோ அதிபர் வாசனுக்கு பெரும் பங்குண்டு. அவர் எடுத்த ஔவையார், சந்திரலேகா உள்ளிட்ட படங்கள் பிரம்மாண்டத்தால் ரசிகர்களை வாய்பிளக்க வைத்தன. அதிலும் சந்திரலேகா என்ற திரைப்படம் தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்திய அளவில் பெற்ற வெற்றியை நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

1940 ஆம் ஆண்டே திட்டமிடப்பட்டு, 3 ஆண்டுகள் முன் தயாரிப்புப் பணிகள் நடத்தி 1943 ஆம் ஆண்டு வாக்கில் தொடங்கப்பட்ட சந்திரலேகா திரைப்படம் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் உருவாக்கத்தில் இருந்தது. சுதந்திரம் கிடைத்த பின்னர் படம் 1948ம் ஆண்டு வெளி வந்தது.  முதலில் இந்த படத்தை இயக்குனர் வேறொரு இயக்குனரை ஒப்பந்தம் செய்தார் வாசன். ஆனால் அவர் எடுத்த படம் தனக்கு பிடிக்காததால் தானே இயக்க முடிவு செய்தார்.

அதே போல அவர் தயாரிப்பில் உருவான ஔவையார் திரைப்படம் 6 ஆண்டுகள் உருவாக்கத்தில் இருந்தது. பல முறை எடுக்கப்பட்டு இருந்த 6 மணிநேரத்துக்கும் மேற்பட்ட காட்சிகளை சுருக்கி படமாக எடுத்து 1953 ஆம் ஆண்டு ரிலீஸ் செய்தார். அந்த படமும் சூப்பர்ஹிட் ஆனது.

தென்னிந்தியாவில் மட்டும் படங்கள் எடுத்ததும் அல்லாமல் இந்தி சினிமாவுக்கும் சென்று பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார் வாசன். அப்படி அவர் எடுத்த சூப்பர்ஹிட் படங்களில் ஒன்றுதான் இன்சானியாத். இந்தி சூப்பர் ஸ்டார் திலீப்குமார் அந்த படத்தில் நடித்தார். அவரோடு அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட ஜிபி என்ற மனிதக்குரங்கு ஒன்றும் நடித்தது.

அந்த குரங்கை வரவழைக்க இரு நாட்டு அரசுகளிடமும் அனுமதி பெற்று அழைத்து வந்து அதற்காக சிறப்பு உணவுகளை எல்லாம் ஏற்பாடு செய்துகொடுத்து பைவ் ஸ்டார் ஓட்டலில் அதைத் தங்கவும் வைத்தாராம் வாசன். அப்படி அந்த குரங்கு 10 நாட்கள் அந்த படத்தில் நடித்ததாம். அந்த படத்தின் வெற்றிக்கு அந்த குரங்கும் ஒரு காரணமாக அமைந்ததாம்.

vinoth

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

2 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

2 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

2 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

2 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

2 மணத்தியாலங்கள் ago