சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடியாக 46 ரூபாய் உயர்த்தப்பட்டு, இனி ஒரு சிலிண்டர் 3,283 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது; அதேநேரம், வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமுமின்றி 928 ரூபாய்க்கே விற்பனையாகிறது என்பது ஓரளவிற்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
ஏற்கனவே டீசல் விலை உயர்வு காரணமாக போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்து, சென்னையில் உள்ள உணவகங்களில் இட்லி, தோசை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பண்டங்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், தற்போது வணிக சிலிண்டரின் இந்த புதிய விலை உயர்வு ஹோட்டல் மற்றும் உணவக உரிமையாளர்களுக்குக் கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இந்த திடீர் விலை ஏற்றம் காரணமாக, ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், நடுத்தர மற்றும் சாமானிய மக்கள் அன்றாட உணவிற்காக கூடுதல் தொகையைச் செலவிட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலம் பரீதாபாத் பகுதியில் ஆன்லைன் தளம் மூலம் ஆர்டர் செய்த பெண் வாடிக்கையாளர் ஒருவருக்கு, டெலிவரி ஊழியரால் நேர்ந்த…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற பி.எட். நுழைவுத் தேர்வு மையத்திற்கு வெளியே, சாக்கடைக் கால்வாயின் கான்கிரீட் மூடி உடைந்ததில்…
தற்போது சமூக ஊடகங்களில் ஒரு குடும்பத்தினர் இரவு உணவு சாப்பிடும் போது எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.…
"அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்து, தற்கொலை செய்துகொண்ட அக்காட்சி நிர்வாகி மகேந்திரனின் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர்…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் மேற்கொள்ளும் கள ஆய்வு நிகழ்வுகளை, சமூக ஊடகங்களில்…
லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பினரின் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, இஸ்ரேல் பிரதமர்…