#image_title
தமிழ் சினிமாவில் பாடல்களின் பொற்காலமாக விளங்கியது 50 களும் 60 களும்தான். அப்போது புகழின் உச்சத்தில் இருந்தவர்கள் உடுமலை நாராயணகவி, மருதகாசி, கண்ணதாசன் போன்றவர்கள். இவர்கள் அனைவரும் படங்களுக்கு பாடல்கள் மட்டும் எழுதாமல் கதை வசனமும் எழுதியுள்ளார்.
50 களில் முதலில் படங்களுக்கு கதை வசனம் மட்டும் எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்த கண்ணதாசன் 50 களின் இறுதியில் படங்களுக்கு பாடல்கள் எழுத ஆரம்பித்தார். அவரின் பாடல்கள் அடுத்தடுத்து ஹிட்டானதால் அவர் பாடல் எழுதுவதில் அதிக ஆர்வம் செலுத்த தொடங்கினார்.
இதில் மற்ற பாடல் ஆசிரியர்களுக்கும் கண்ணதாசனுக்கும் இடையே ஒரு மிகப்பெரிய வித்தியாசமே கண்ணதாசன் இசையமைப்பாளர் பாடல் மெட்டை சொன்னதுமே வரிகளை மழை போல கொட்டுவார் என்பதுதான். எந்தவொரு மெட்டுக்குமே அவர் வீட்டுக்கு எடுத்து சென்று பாடல் எழுதியதில்லை என்பதுதான். கண்ணதாசனின் பாடல் எழுதும் வேகத்தை இளையராஜா பல மேடைகளில் விதந்தோதி பேசியுள்ளார்.
அதே போல தன்னுடைய பாடல் வரிகளில் யாராவது திருத்தம் சொன்னாலும் அது சரியாக இருந்தால் எந்தவித ஈகோவும் இல்லாமல் அதை ஏற்றுக்கொள்வார் என்பதுதான். இதுபற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பாடல் ஆசிரியர் கங்கை அமரன் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
முள்ளும் மலரும் படத்தில் இடம்பெற்ற செந்தாழம் பூவில் பாடலை கண்ணதாசன் எழுதும்போது “செந்தாழம் பூவில் உக்காந்த தென்றல்” என எழுதியுள்ளார். அப்போது கம்போசிங்கில் இருந்த கங்கை அமரன் “செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்” என மாற்றிக் கொள்ளலாமா எனக் கேட்டுள்ளார். அதைக் கேட்ட கண்ணதாசன் “ரொம்ப நல்லா இருக்கு. அப்படியே வச்சுக்கலாம்” எனக் கூறி கங்கை அமரனை பாராட்டினாராம்.
கங்கை அமரன் சில காலம் கண்ணதாசனிடம் உதவியாளராகவும் பணியாற்றியுள்ளார். அப்போதும் தான் சொன்ன சில மாற்றங்களை கண்ணதாசன் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…