‘காலா’ திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து மிரட்டியவர் நடிகர் நானா பட்டேக்கர். இவர் நடிகர் மட்டுமின்றி இயக்குனர், பாடகர், என பல்வேறு திறமைகளை கொண்டவர். இவர் ஏற்கனவே தமிழில் அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘பொம்மலாட்டம்’ திரைப்படத்தில் கோபக்கார இயக்குனராக நடித்திருப்பார். இப்படி பொம்மலாட்டம் படத்தில் சைலட்டாக நுழைந்து, வெயிட்டான வில்லன் என்று ‘காலா’ படத்தின் மூலம் நிரூபித்துள்ளார் நானா பட்டேக்கர்.

இவரின் முழுப்பெயர் விஷ்வநாத் பட்டேக்கர். மகாராஷ்டிராவில் பிறந்த இவர் மும்பையில் இருக்கும் சர்.ஜே.ஜே. இன்ஸ்டிடியூட் ஆப் ஆப்லைட் ஆட்ஸ் கல்லூரியில் படித்தார். இவருடைய முதல் திரைப்படம் ‘கமான்’. பாலிவுட் திரைப்படமான இது 1978 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதை தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் இவருக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியது ‘பரிந்தா’ என்கிற திரைப்படம் தான்.

இவர் பாலிவுட் திரைப்படங்கள் மட்டும் இன்றி பல மொழிப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக மராத்தி மொழியில் இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் ‘கிரந்த்வீர்’ என்கிற திரைப்படத்தில் நடித்ததற்காக 1995 ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். மேலும் 1990 ஆம் ஆண்டு நடித்த ‘பரிந்தா’ மற்றும் 1997 ஆம் ஆண்டு வெளியான ‘அக்னி சாக்ஷி’ ஆகிய படங்கள் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றார்.

இதோடு மட்டுமின்றி விவசாயிகளுக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். தற்பொழுதும் இவர் பல்வேறு மொழித்திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் அவருடன் செல்பீ எடுத்துக் கொள்ள முயன்ற போது அவரை தலையிலேயே ஓங்கி அடித்து தள்ளி விடுகிறார். தற்பொழுது அவர் செய்த இந்த செயலுக்கு நெட்டிசன்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
Stars won’t exist without fans….Fans should also avoid taking selfies with these egoistic stars…
What is this #Nanapatekar ji???#Prabhas never did like this in his entire career even after getting PAN Indian stardom with #Baahubali ….#Salaar pic.twitter.com/Mb6dIFkzzw— Tolly hub (@tolly_hub) November 15, 2023
