#image_title
பிரபல இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியை விவாகரத்து செய்யப் போவதாக தனது சில நாட்களுக்கு முன்பு சோசியல் மீடியாவில் அறிவித்தார். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் ஜிவி பிரகாஷின் அம்மாவும் ஏ.ஆர் ரகுமானின் சகோதரிமான ரெய்ஹானா சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார்.
அவர் கூறியதாவது, சைந்தவி அன்னவுன்ஸ் பண்ணதுக்கு அப்புறம் தான் எனக்கு தெரியும். அதுக்கப்புறம் நானும் பிரகாஷும் ஒரு டிராவல் போயிருந்தோம். அப்போ பிரகாஷ் கிட்ட நான் முழுவதும் அத பத்தி மட்டும் தான் பேசுவேன். என் பொண்ணு வந்து ஒரு சில விஷயங்களை சொன்னா. எனக்கு அதை நம்புறதுக்கும் இஷ்டம் இல்ல. அதனால அத பத்தி பேசுறதுக்கும் இஷ்டம் இல்ல. அவங்களா புரிஞ்சுகிட்டு ஒன்றாக சேர்ந்து வாழணும் அப்படின்னு நான் நினைக்கிறேன்.
இதுக்கு மேல நான் எதையும் சொல்ல விரும்பல. இது ஜிவி பிரகாஷுக்கும் சைந்தவிக்கும் இடையே இருக்கிற பிரச்சனை. இதுல சொசைட்டி தலையிடவே கூடாது. அவங்க ரெண்டு பேருக்குள்ள ஒத்து வந்துச்சுன்னா சேர்ந்து இருப்பாங்க. அப்படி இல்லன்னா இருக்க முடியாது. சொசைட்டிக்காக ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்தால் அது ரொம்ப பிரஷர். ரெண்டு பேருக்குமே அது மெண்டல் பிரஷர் தான்.
இந்த சொசைட்டிக்காக சேர்ந்து வாழ்வது எனக்கு சுத்தமா பிடிக்காத ஒரு விஷயம். ரெண்டு பேரும் புரிந்துகொண்டு செட் ஆகுதுன்னு ஒண்ணா சேர்ந்து வாழ்ந்தா போதும். ரெண்டு பேருக்கும் இடையில் ஒரு பிரச்சனை இருக்கு. அது அவங்க வெளியே சொல்ல மாட்டாங்க. அவங்க வெளியே சொல்லாம இருக்கிறதும் நல்லது தான். காலம் எல்லாத்தையும் சரி பண்ணும். அவங்க ரெண்டு பேரும் சேர்ந்தா நான் ரொம்ப ஹேப்பியா இருப்பேன். ஏன்னா சைந்தவி ஒன்டர்புல் பர்சன் என ஜிவி பிரகாஷ் அம்மா கூறியுள்ளார்.
பிரபல முன்னணி ஐடி நிறுவனமான ஐபிஎம் (IBM), தற்போது அசோசியேட் சிஸ்டம் இன்ஜினியர் (Associate System Engineer) பணிக்குத் தகுதியான…
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வெற்றியை முன்னிட்டு ராமநாதபுரம் பேருந்து நிலையம் அருகே ஆபத்தான முறையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியின்…
வங்கிகளின் வங்கி என்று போற்றப்படும் இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI), அதிகாரி பிரிவில் காலியாக உள்ள 60 பணியிடங்களை நிரப்புவதற்கான…
சென்னை ராயபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) எம்.எல்.ஏ விஜய் தாமு தனது பிறந்தநாளை முன்னிட்டு வாளால் கேக் வெட்டிய…
மேற்கு வங்கத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் அடைந்த தோல்வியைத் தொடர்ந்து, முதல்வர் மம்தா பானர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்ய…
மத்திய அரசின் அடல் பென்சன் திட்டம் (APY) தற்போது இந்தியாவில் மிக முக்கியமான சமூகப் பாதுகாப்புத் திட்டமாக உருவெடுத்துள்ளது. 2015…