தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய், டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வியூகத்தைப் பின்பற்றி கோவா, பஞ்சாப், டெல்லி போன்ற பிற மாநிலத் தேர்தல்களில் போட்டியிட்டு வாக்குகளைப் பிரிப்பதன் மூலம் தவெகவை ஒரு தேசியக் கட்சியாக உயர்த்தவும், வரும் 2029 மக்களவைத் தேர்தலில் தன்னை ஒரு பிரதமருக்கான வேட்பாளராக முன்னிறுத்தவும் திட்டமிட்டு வருவதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
இருப்பினும், இந்தத் திட்டம் நடைமுறையில் சாத்தியமா என்ற கேள்வி எழுகிறது; ஏனெனில் ஒரு கட்சி தேசியக் கட்சியாக அங்கீகாரம் பெற குறைந்தபட்சம் 4 மாநிலங்களில் தலா 6% வாக்குகளைப் பெற வேண்டும் அல்லது 3 மாநிலங்களில் 11 மக்களவைத் தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் கடுமையான விதிகள் அமலில் உள்ளன. திராவிட அரசியல் தளம் கொண்ட தமிழகத்தைத் தாண்டி, இந்தி பேசும் மாநிலங்கள் மற்றும் பிற வடமாநிலங்களின் மொழி, கலாச்சாரம் மற்றும் உள்ளூர் அரசியல் சூழலுக்கு ஏற்ப தனது அமைப்பை உடனடியாகக் கட்டமைப்பதும், ஏற்கனவே தேசிய அளவில் வலுவாக இருக்கும் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு மத்தியில் தனக்கான வாக்கு வங்கிய உருவாக்குவதும் விஜய்க்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். அதோடு, தேசிய அங்கீகாரம் இல்லாத நிலையில் இப்போதே பிரதமர் வேட்பாளர் என்ற பிம்பத்தை முன்னெடுப்பது, தமிழகத்தில் அவருடன் தற்போதைய அரசில் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸுக்கு அதிருப்தியையும் அழுத்தத்தையும் உருவாக்கியுள்ளதால், இந்தத் திட்டம் தவெகவுக்கு ஆரம்பக்கட்ட அரசியலில் பெரும் நன்மையைத் தராது என்பதே அரசியல் வல்லுநர்களின் கணிப்பாக உள்ளது.
