EPFO பயனர்களுக்கு முக்கிய செய்தி…! சென்னையில் வரும் 28-ஆம் தேதி மிஸ் பண்ணாம மறக்காம போங்க..!!

By Soundarya on ஆடி 26, 2025

Spread the love

தனியார் நிறுவனங்களில் வேலை செய்யக்கூடிய நபர்களுக்கு பி எப் பணம் என்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு மாதமும் அவர்கள் வாங்கும் சம்பளத்தில் ஒரு சிறு தொகை தனியாக சேமிக்கப்படுகின்றது. அதே அளவு பங்களிப்பு நிறுவனத்தாலும் வழங்கப்படுகின்றது. PF பணத்திற்கு வட்டி வருமானமும் கிடைக்கின்றது. இந்த நிலையில் சென்னையில் வருங்கால வைப்பு நிதி குறைதீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

“வருங்கால வைப்பு நிதி உங்கள் ஊரில்” என்னும் குறைதீர்ப்பு முகாம் வருகிற 28ஆம் தேதி சென்னை உள்ளிட்ட 10 இடங்களில் நடைபெற உள்ளது.  EPFO கணக்கோடு ஆதார் இணைத்தல், வாரிசுதாரர் பதிவு, ஆன்லைன் சேவை, வேலை வாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம் போன்றவை முகாமில் விளக்கப்பட உள்ளன. விருப்பமுள்ளோர் www.epfindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் முகவரியில் உள்ள கூகுள் படிவத்தை பூர்த்தி செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.