BREAKING: சற்றுமுன் இவர்களின் வங்கிக்கணக்கில் பணம் வந்தது… உடனே செக் பண்ணுங்க..!!

By Soundarya on ஆனி 5, 2026

Spread the love

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வுடன் கூடிய ஓய்வூதியத் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு பொதுவாகப் பணியில் இருக்கும் தற்போதைய ஊழியர்களுக்கு மட்டுமே முதலில் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். அதன் பின்னர் ஓய்வூதியதாரர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்த பிறகே அவர்களுக்கான உயர்வு வழங்கப்படும். ஆனால் இந்த முறை, முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓய்வூதியதாரர்களின் கணக்குகளில் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த அதிரடி உத்தரவின் மூலம், சுமார் 93,000 போக்குவரத்துத் துறை ஓய்வூதியதாரர்கள் பயனடைந்துள்ளனர். இவர்களின் ஓய்வூதியத் தொகையில் அதிகபட்சமாக ₹700 வரை கூடுதலாக உயர்வுடன் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறை ஓய்வூதியதாரர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, இந்தத் தொகை முன்கூட்டியே விடுவிக்கப்பட்டிருப்பது ஓய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது