60 கி.மீ வேகத்தில் பறந்த கார்…. ஜன்னலைப் பிடித்து தொங்கிய விசிக நிர்வாகி… அதிர்ச்சியில் உறைந்த திருமாவளவன்… நடுரோட்டில் பதறவைத்த சம்பவம்…!

By Nanthini on ஆவணி 4, 2026

Spread the love

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவனின் காரை உரசியபடி, ஜன்னல் கதவைப் பிடித்துக்கொண்டு கார் சென்ற வேகத்திலும் நிர்வாகி ஒருவர் ஆபத்தான முறையில் தொங்கியபடி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் – நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை மாநாடு தொடர்பான ஆலோசனைக்குப் பிறகு திருமாவளவன் புறப்பட்டபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கார் சுமார் 60 கி.மீ வேகத்தில் சீறிப் பாய்ந்தபோதிலும், அதைப்பற்றிப் பொருட்படுத்தாமல் அந்த நிர்வாகி காரை விடாமல் பிடித்துக் கொண்டு உரையாடியபடியே சென்ற காட்சி காண்போரைக் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இவ்வாறு உயிருக்கு ஆபத்தான நிலையில் காரில் தொங்கியபடி சென்றவர் கடலூர் வி.சி.க நகர துணைச் செயலாளர் பரதன் எனத் தெரியவந்துள்ளது. கார் சுமார் 100 மீட்டர் தூரம் வரை வேகமாகக் கடந்த பின்னரே, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த திருமாவளவன் உடனடியாக ஓட்டுநரிடம் காரை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார். கார் மெதுவாக நிறுத்தப்பட்டதை அடுத்து, அந்த நிர்வாகி பாதுகாப்பாகக் கீழே இறங்கிச் சென்றுள்ளார். ஜூன் 17-ஆம் தேதி நிகழ்ந்த இச்சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் பரவி வரும் நிலையில், “என்னதான் முக்கியமான செய்தியாக இருந்தாலும், இந்த அளவிற்கு உயிரைப் பணயம் வைத்து தொங்கியபடி பேசுவது மிகுந்த ஆபத்தானது” என நெட்டிசன்கள் பலரும் தங்களது கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

   

மற்றொருபுறம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆகஸ்ட் 17-ஆம் தேதி உளுந்தூர்பேட்டையில் நடைபெறவுள்ள ‘தமிழ் தேசிய எழுச்சி மாநாடு’க்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இம்மாநாட்டிற்காகப் பிரமாண்டமான பந்தல் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் சூழலில், கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் மாநாட்டுப் பணிகளில் முழு மூச்சாக ஈடுபட்டுள்ளனர். அண்மையில் விசிக அமைச்சரான வன்னி அரசு மாநாட்டுத் திடலைப் நேரில் பார்வையிட்டுப் பணிகளை ஆய்வு செய்துள்ளார்.

   

தமிழக அரசியல் சூழலில் ஆளும் தவெக கூட்டணி அரசில் விசிக அங்கம் வகிக்கும் நிலையிலும், கட்சிக்குள் பல அரசியல் திருப்பங்கள் நடந்து வரும் சூழலிலும் இம்மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்மாநாட்டிற்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களை அழைப்பது குறித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் விரைவில் அதிகாரப்பூர்வ முடிவு அறிவிப்பார் என்று அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார். இந்நிலையில்தான், மாநாட்டுப் பணிகளுக்கு இடையே இந்த வைரல் வீடியோவும் அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.