அடேங்கப்பா.. இவ்வளவு பெரிய டிராமாவா?… கொலை மிரட்டல் முதல் கணவருடன் செல்ஃபி வரை… மோனாலிசா விவகாரத்தில் அரவிந்த் ஜோஷியின் அந்தர் பல்டி…!!!

By Muthu Mani on சித்திரை 14, 2026

Spread the love

2025-ஆம் ஆண்டு பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் தனது தனித்துவமான நீல நிறக் கண்களால் அனைவரையும் ஈர்த்து, ஒரே இரவில் இணையத்தில் வைரலானவர் மோனாலிசா போஸ்லே. சமீபகாலமாக அவர் காணாமல் போய்விட்டதாகவும், அவருக்கு ஏதோ ஆபத்து நேர்ந்துவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. குறிப்பாக, ஃபர்மான் என்ற இளைஞர் மோனாலிசா தன்னை விட்டு ஓடிப்போய்விட்டதாகக் கூறி வீடியோக்களை வெளியிட்டது இந்தச் சர்ச்சையைத் தூண்டியது.

ஃபர்மான் கான் வெளியிட்ட வீடியோவைத் தொடர்ந்து, இணையவாசிகள் மத்தியில் பெரும் குழப்பமும் அச்சமும் நிலவியது. மோனாலிசா தப்பி ஓடவில்லை என்றும், அவரது கணவரான ஃபர்மானே அவரைக் கொலை செய்திருக்கலாம் என்றும் பலர் சமூக வலைதளங்களில் ஊகங்களை அள்ளி வீசினர். இதன் விளைவாக “மோனாலிசாவுக்கு நீதி வேண்டும்” (#JusticeForMonalisa) என்ற ஹேஷ்டேக்குகள் வைரலாகி, விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

   

இந்தச் சூழலில், மோனாலிசா போஸ்லே தற்போது முன்வந்து அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தான் பாதுகாப்பாக இருப்பதாகவும், தனது கணவர் ஃபர்மானுடன்தான் தொடர்ந்து வசித்து வருவதாகவும் கூறி அதற்கான புகைப்பட ஆதாரங்களைப் பகிர்ந்துள்ளார். மேலும், வீடியோ வெளியிட்ட இளைஞர் தான் ஃபர்மானைப் போலவே தோற்றமளிப்பவர் என்றும், பொழுதுபோக்கிற்காகவே அந்த வீடியோக்களை எடுத்ததாகவும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்தச் சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.