“என் மனைவியை பற்றி தப்பா பேசுறியா…?”டிரைவரை கழுத்தறுத்து கொன்ற நண்பர்கள்… பதற வைக்கும் பின்னணி…!!

Spread the love

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மது விருந்தின் போது ஏற்பட்ட தகராறில் முனீஸ்வரன் என்ற ஆட்டோ ஓட்டுநர் அவரது நண்பர்களாலேயே பீர் பாட்டிலால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். அனந்தபுரம் பைபாஸ் பகுதியில் உள்ள சதீஷ் என்பவரது வீட்டு மாடியில், சதீஷ் மற்றும் கார்த்திகேயன் ஆகியோருடன் இணைந்து முனீஸ்வரன் மது அருந்தியுள்ளார். அப்போது போதை தலைக்கேறிய நிலையில், நண்பன் சதீஷின் மனைவியைப் பற்றி முனீஸ்வரன் இழிவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் மற்றும் கார்த்திகேயன் இருவரும் முனீஸ்வரனைக் கண்டித்துள்ளனர். இருப்பினும் அவர் தொடர்ந்து தவறாகப் பேசவே, பொறுமையிழந்த இருவரும் அங்கிருந்த பீர் பாட்டிலை உடைத்து முனீஸ்வரனின் கழுத்தை அறுத்துத் துடிக்கத் துடிக்கக் கொன்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த சதீஷ் மற்றும் கார்த்திகேயனைத் தீவிர விசாரணைக்குப் பின் கைது செய்து சிறையில் அடைத்தனர். மதுப் பழக்கமும், எல்லை மீறிய பேச்சும் ஒரு உயிர் பறிபோகக் காரணமாக அமைந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

கஞ்சா போதையில் முதியவரை அடித்தே கொன்ற கும்பல்…. தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி..!!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கஞ்சா போதையில் இருந்த ஒரு கும்பல், அந்தப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவரிடம் வேண்டுமென்றே…

2 minutes ago

பகீர்..! “வா உனக்கு ஒரு சர்பிரைஸ்” ஆசையாக அழைத்து சென்ற காதலி.. கண்ணைக் கட்டி காதலனை உயிரோடு எரித்த கொடூரம்.. பெங்களூர் நடுங்கிப்போச்சு..!!

பெங்களூருவில் உள்ள தொலைத்தொடர்பு கடை ஒன்றில் பணிபுரியும் பிரேர்ணா (27) என்ற பெண், அதே கடையில் தன்னுடன் பணிபுரிந்து வந்த…

12 minutes ago

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

11 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

11 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

11 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

12 மணத்தியாலங்கள் ago