டெல்லியில் உள்ள ஒரு குடியிருப்பில் நண்பர்கள் குழுவாக இணைந்து உணவு ஆர்டர் செய்து பார்ட்டி கொண்டாடிக்கொண்டிருந்தனர். உணவை டெலிவரி செய்ய வந்த இளைஞர், தனது பணியை முடித்துவிட்டு கிளம்பத் தயாரானபோது, அங்கிருந்த இளைஞர்கள் அவரை அன்புடன் தடுத்து நிறுத்தி தங்களது கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைத்தனர்.
மேலும் முதலில் அவர் தயக்கத்துடன் இதை ஒரு கிண்டல் என்று நினைத்தாலும், அவர்களின் விடாப்பிடியான அன்பும் வற்புறுத்தலும் அவரை நெகிழச் செய்தது. அந்த நேரத்தில் ‘துரந்தர்’ திரைப்படத்தின் உற்சாகமான பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, அந்த இளைஞரை அங்கிருந்தவர்கள் உற்சாகப்படுத்தி ஆட வைத்தனர். ஆரம்பத்தில் கூச்சப்பட்ட அந்த டெலிவரி ஊழியர், அந்த நண்பர்களின் எதார்த்தமான அன்பால் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பினார்.
இதனால் ஒரு கட்டத்தில் நண்பர்கள் அவரைத் தங்கள் தோள்களில் தூக்கி வைத்துக் கொண்டாட, அந்த இடமே மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியது. அந்நியர் என்ற பாகுபாடின்றி ஒரு உழைப்பாளியைத் தங்கள் மகிழ்ச்சியில் பங்கெடுக்கச் செய்த அந்த இளைஞர்களின் செயல் அனைவரின் மனதையும் தொட்டது. சிறிது நேரம் உற்சாகமாக நடனமாடிவிட்டு, புன்னகையுடன் விடைபெற்ற அந்த இளைஞர், மீண்டும் தனது பணிகளைத் தொடர அங்கிருந்து கிளம்பினார். மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.
