கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் நில மங்கல அருகே உள்ள பகுதியில் வசித்து வரும் யதீஷ் என்ற 26 வயது வாலிபரும் அதே பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமியும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். ஆனால் அந்த வாலிபருக்கு சிறுமி மீது தவறான கண்ணோட்டம் இருந்துள்ளது. இப்படியான நிலையில் அந்த சிறுமிக்கு பிறந்தநாள் வந்ததால் அதனை அறிந்த வாலிபர் சிறுமியின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டுவதாக கூறி ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பிறகு அங்கு வைத்து கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர். அதன் பிறகு அந்த நபர் சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனே அந்த வாலிபர் மீது போலீசில் புகார் அளித்தனர். உடனே வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த வாலிபரை கைது செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
