சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத் சௌக்கை அடைந்ததும், மேலும் சிலரை வரவழைத்து, அவரை பெல்ட்டாலும் கை மற்றும் கால்களாலும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். பின்னர் அவரிடமிருந்த ரூ 7,45,000 ரொக்கப் பணத்தைப் பறித்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான காணொளி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த விடியோவைப் பார்க்கும்போது, குற்றவாளிகள் சட்டத்தையும் காவல்துறையையும் சிறிதும் பொருட்படுத்தாமல் எந்த அளவுக்குத் தைரியமாக இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெளிவாகப் புலனாகிறது.
https://twitter.com/RahulSi86132882/status/2100565035059916979/video/1
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், குற்றவாளிகளுக்குச் சட்டத்தின் மீதான பயத்தை ஏற்படுத்தவும் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். விடியோ ஆதாரங்களை முழுமையாக ஆய்வு செய்து, குற்றத்தில் ஈடுபட்ட அனைவரையும் விரைவாகக் கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
