6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு… பள்ளிகளில் இலவசமாக சானிட்டரி நாப்கின்… அதிரடி உத்தரவு..!!

By Soundarya on தை 30, 2026

Spread the love

மாணவிகளின் கல்வித் தொடர்ச்சி மற்றும் சுகாதாரத்தைப் பாதுகாப்பதில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மாதவிடாய் காலங்களில் போதிய வசதிகள் இல்லாததால் மாணவிகள் பள்ளியில் இருந்து விலகுவதைத் தடுக்க, தேசிய அளவிலான சீரான கொள்கையை வகுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், பள்ளி வளாகங்களில் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனித்தனியான மற்றும் சுகாதாரமான கழிப்பறைகள் இருப்பதை உறுதி செய்வது மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் கடமை எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் சுகாதாரக் கொள்கையை முறையாக அமல்படுத்துவதன் மூலம், கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள மாணவிகள் தடையின்றி கல்வி பயில வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் அனைத்தும் உள்ளடக்கிய கல்விச் சூழலை உருவாக்குவதற்கான ஒரு கட்டாயத் தேவையாகப் பார்க்கப்படுகிறது.