சென்னையில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைக் காணச் செல்லும் ரசிகர்களுக்கு உதவும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒரு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளுக்கான நுழைவுச் சீட்டு (டிஜிட்டல் அல்லது காகித டிக்கெட்) வைத்திருப்பவர்கள், சென்னையின் எந்தவொரு மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்தும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திற்கு இலவசமாகப் பயணம் செய்யலாம். ரசிகர்கள் தங்களது டிக்கெட்டில் உள்ள கியூ ஆர் (QR) குறியீட்டை ஸ்கேன் செய்து, எந்தவித கூடுதல் கட்டணமும் இன்றி இரண்டு முறை நுழையவும் மற்றும் வெளியேறவும் (சுற்றுப் பயணம்) இந்தச் சலுகை அனுமதிக்கிறது.
ரசிகர்களின் வசதிக்காகப் போட்டி நடைபெறும் நாட்களில் மெட்ரோ ரயில் சேவைகள் நள்ளிரவு 1 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. அரசினர் தோட்டம் நிலையத்திலிருந்து விம்கோ நகர் மற்றும் விமான நிலைய நிலையங்களுக்கு நள்ளிரவு 1 மணிக்குக் கடைசி ரயில்கள் புறப்படும். இதேபோல், மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) சார்பிலும் போட்டி தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பும், முடிந்த பிறகு 3 மணி நேரம் வரையிலும் ஏசி இல்லாத சாதாரண பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…