ஏழை மக்களின் பசி தீர்க்க வேண்டிய ரேஷன் கடையில் நடக்கும் முறைகேடு குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது வெறும் ஊழல் மட்டுமல்ல, அது மனிதாபிமானமற்றக் கொடுமையாகும். ஏழை எளிய குடும்பங்களுக்குச் சேர வேண்டிய உணவுப் பொருட்களை, எடையில் மோசடி செய்து திருடுவது வெட்கக்கேடான செயலாகும். எடை மிஷினில் 2 கிலோ எடைக்கல்லை வைத்து எடை போடுகிறார். இதன் மூலம் 2 கிலோ அரிசியை மோசடி செய்கிறார்கள். வறுமையோடு போராடும் மக்களின் உரிமைகளைத் தட்டிப்பறித்து, அதில் லாபம் பார்க்கும் இந்த பேராசை மிகுந்த செயல் சமூகத்தின் மீதான பெரும் வன்முறையாகவே பார்க்கப்படுகிறது.
Shameful greed exposed! A ration dealer allegedly cheats the poor by rigging weights, stealing food meant for struggling families. This isn’t just corruption . it’s cruelty. Exploiting the vulnerable for profit is disgusting. Authorities must act immediately, punish the culprits,… pic.twitter.com/mBXnA0jvgt
— The Nalanda Index (@Nalanda_index) March 31, 2026
தனது லாபத்திற்காக எளியவர்களின் வயிற்றிலடிக்கும் இந்தச் செயல் மிகவும் அருவருப்பானது. தரம் குறைந்த சேவையை வழங்குவதோடு மட்டுமல்லாமல், எடையைக் குறைத்து மக்களை ஏமாற்றும் ரேஷன் கடை ஊழியர்களின் இத்தகைய மோசடிகள் உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் உரிமையைக் கேட்க முடியாமல் தவிக்கும் நிலையில், அதிகாரிகளின் மெத்தனப்போக்கு இத்தகைய குற்றவாளிகளுக்கு மேலும் துணிச்சலைத் தருகிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, முறைகேட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மோசடி செய்யும் நபர்களைப் பணியிலிருந்து நீக்குவதோடு, சட்ட ரீதியான தண்டனைகளையும் உறுதி செய்ய வேண்டும். அப்பாவி மக்கள் மீண்டும் இதுபோன்று ஏமாற்றப்படுவதைத் தடுக்கவும், ரேஷன் விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரவும் அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
