“என் உயிருக்கு ஆபத்து… சொத்துக்காக பழிவாங்குகிறார்…!” – நடிகர் சரவணன் மீது முதல் மனைவி போலீசில் பகீர் புகார்…!

By Swetha on ஆனி 22, 2026

Spread the love

‘பருத்திவீரன்’ திரைப்படத்தில் சித்தப்பு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகர் சரவணன் மீது, அவரது முதல் மனைவி சூர்யாஸ்ரீ சென்னை மவுலிவாக்கம் காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில், தனது வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்களை சரவணன் ஆட்களை வைத்து அகற்றியதாகவும், தனக்கும் தனது சொத்துக்களுக்கும் ஆபத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னிடம் சட்டப்படி விவாகரத்து பெறாமல் சரவணன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சரவணன் தனது இரண்டாவது மனைவி மற்றும் மகனுடன் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று விளக்கம் அளித்ததுடன், முதல் மனைவிக்கு எதிராக எதிர் புகார் ஒன்றையும் அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது இரண்டாவது திருமணத்திற்கு முதல் மனைவியே சம்மதம் தெரிவித்திருந்ததாகக் கூறினார். தற்போது தன்னிடம் இருந்து பணம் பறிக்கும் நோக்கத்திலேயே அவர் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி வருவதாகவும் சரவணன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

   

மேலும், தனக்குத்தான் தனது முதல் மனைவி கொலை மிரட்டல் விடுத்து வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள நடிகர் சரவணன், அமைதியாக வாழ வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும், 12 ஆண்டுகளாகப் பேசாமல் இருந்துவிட்டு இப்போது திடீரென புகார் அளிப்பதன் பின்னணியை போலீசார் விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது, மவுலிவாக்கம் காவல்துறையினர் இருதரப்பு புகார்களையும் பெற்றுக்கொண்டு, இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.