இனி யாரும் ஓட்டு போட வரிசையில் நிற்க வேண்டாம்… வீட்டிலிருந்தே மொபைல் செயலி மூலம் வாக்களிக்கலாம்..!

By Nanthini on ஆனி 26, 2025

Spread the love

மொபைல் போன் மூலமாக தேர்தலில் வாக்களிக்கக்கூடிய வசதியை பீகார் தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. C- DAC வடிவமைத்துள்ள e-voting SECBHR என்ற ஆண்ட்ராய்டு செயலி மூலமாக வாக்களிக்கலாம். வாக்காளர் ஐடி, ரியல் டைம் செல்ஃபி, லைவ் லொகேஷன் ஆகியவற்றை கொடுத்து இதன் மூலமாக வாக்களிக்க முடியும்.

இது அந்த மாநிலத்தில் ஜூன் 28ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் அறிமுகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் மொபைல் செயலி மூலம் வாக்களிக்கும் வசதி கொண்டுவரப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.