ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் அதோனி பகுதியைச் சேர்ந்த கங்கம்மா என்ற பெண்ணிற்கு, கணவர் இறந்த பிறகு நரசிம்மலு என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இவர்களின் வீட்டிற்கு நரசிம்மலு அடிக்கடி வந்து சென்றதை கங்கம்மாவின் 15 வயது மூத்த மகன் வீரேந்திரா கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கங்கம்மாவும் அவரது காதலனும் சேர்ந்து, கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வீரேந்திராவை கொடூரமாகக் கொலை செய்து சுடுகாட்டில் ரகசியமாகப் புதைத்தனர்.
மறுநாள், தனது மகனைக் காணவில்லை என நாடகமாடி கங்கம்மா காவல் நிலையத்தில் புகாரளித்தார். இரண்டு வருடங்களாக போலீஸார் தேடி வந்த நிலையில், கங்கம்மாவே நீதிமன்றத்தில் தன் மகனை போலீஸார் கண்டுபிடிக்கவில்லை என வழக்கும் தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின்படி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி, கங்கம்மாவின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தபோது அவரது கள்ளக்காதல் விவகாரமும், காதலனுடன் சேர்ந்து மகனைப் பெற்ற தாயே கொலை செய்த அதிர்ச்சி உண்மையும் அம்பலமானது.
இதனையடுத்து வீரேந்திராவின் உடலைத் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்த போலீஸார், கங்கம்மாவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் அவருக்குக் கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தத் தற்கொலை மற்றும் கொலை வழக்கில் தொடர்புடைய கள்ளக்காதலன் நரசிம்மலுவைத் தனிப்படை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
